News November 5, 2025
தஞ்சை: 300 கிலோ போதை பொருள் கடத்தல்

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்குகிடமாக வாகனங்களை சோதனை செய்ததில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தி வந்த கும்பகோணம், புளியம்போட்டையைச் சேர்ந்த சதீஷ் குமார், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விம்பாராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்த 296 கிலோ குட்கா போதைப்பொருட்கள், 2 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 5, 2025
தஞ்சை மீனவர்கள் 3 பேர் விடுவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் இருந்து கடந்த அக்.16-ம் தேதி ராஜா, முரளி, குமார் ஆகிய 3 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற போது, டீசல் தீர்ந்து போனதால் இலங்கை எல்லைக்குள் சென்றனர். இதையடுத்து 3 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், 3 பேரையும் படகுடன் இந்தியா கடற்படையிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கி உள்ளது.
News November 5, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று (நவ.5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 4, 2025
தஞ்சாவூர்: வெளுத்து வாங்கப்போகும் மழை!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (நவ.05) மற்றும் நவ.06ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!


