News December 31, 2025
தஞ்சை: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி, அவருடைய வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (25) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.
Similar News
News December 31, 2025
தஞ்சாவூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News December 31, 2025
தஞ்சையில் மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை

பாபநாசம் தாலுகா உள்ளிக்கடை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிக்கும் 65 வயது மூதாட்டி, கூலி வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மும்மூர்த்தி (46) என்பவர், மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரின் பேரில், போலீசார் மும்மூர்த்தியை கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News December 31, 2025
தஞ்சை: பணம் மோசடி – அரசு ஊழியர் மீது புகார்

கும்பகோணத்தில் மாற்றூத்திறனாளியான மகாலட்சுமி, தனது மகள்களின் திருமணத்திற்காகச் சேமித்த ரூ.2.50 லட்சத்தை, அரசு ஊழியரான மணிகண்டன் என்பவர் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். 2019-ல் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தர மறுத்த மணிகண்டன், அதிகார பலத்தால் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் பணத்தை மீட்டு தர மகாலட்சுமி, கோரிக்கை மனு அளித்துள்ளார்.


