News October 20, 2025

தஞ்சை: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை!

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் bankofbaroda.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT

Similar News

News October 20, 2025

தஞ்சை: மழையால் ஒரே நாளில் 7 வீடுகள் இடிந்து சேதம்

image

பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்த நிலையில் திடீரென கன மழை பெய்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக 3 குடிசை வீடுகள் உள்பட 7 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன.

News October 20, 2025

தஞ்சை: மதுபோதையில் தொழிலாளி அடித்துக் கொலை!

image

துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(39). நேற்று முன்தினம் இரவு பேராவூரணி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு துவரங்குறிச்சி செல்லும் வழியில் பள்ளத்தூர் ஆற்றுப்பாலத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த பள்ளத்தூரை சேர்ந்த செந்தில்(41) என்பவர், பாண்டியராஜனிடம் தகராறில் ஈடுபட்டு கட்டையால் அடித்துள்ளார். இதில் பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News October 20, 2025

தஞ்சை: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு!

image

தீபாவளி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உங்கள் அப்பகுதியில் ஏதேனும் தீ விபத்துகள் ஏற்பட்டாலோ அல்லது அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள். 1.தஞ்சை-04362 238301, 2.கும்பகோணம் – 0435 2431101, 3.ஒரத்தநாடு-04372 233422, 4.பாபநாசம் – 04374 222101, 5.பட்டுக்கோட்டை – 04373 222101, 6.திருவிடைமருதூர்-0435 2460101 ஆகிய எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம். தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!