News December 14, 2025
தஞ்சை: வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 12ஆம் தேதி ராமச்சந்திரன் என்பவரை இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்கச்சியினை வழிப்பறி செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கொண்டு டேனியல் ஆபிரகாம், ஆண்டனி ஆர்தர் டேவிஸ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
Similar News
News March 1, 2026
தஞ்சை பெரிய கோயில் நடை மூடல்

தஞ்சை பெரிய கோயிலின் நடை வரும் 3ம் தேதி அன்று சந்திர கிரகணத்தை காலை 9 மணி முதல் இரவு 7:30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, 7.30 மணிக்கு பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் வழிபாட்டிற்காக நடை திறக்கப்படும் என்று தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
News March 1, 2026
தஞ்சை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
தஞ்சை: +2 பொதுத்தேர்வில் பங்கேற்க உள்ள 26,854 மாணவர்கள்

தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 2) தொடங்கப்படவுள்ள +2 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 854 போ் பங்கேற்று எழுதுகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வுக்காக 111 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. +2 பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


