News January 2, 2025

தஞ்சை வந்த 2500 டன் அரிசி

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கடைகளின் மூலம் பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்பு திட்டத்தின் கீழ் சர்க்கரை ,கரும்பு ,பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். அந்த வகையில், டெல்டா மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வழங்குவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 2,500 டன் பச்சரிசி சரக்கு ரயில் மூலம் தஞ்சைக்கு வந்தது.

Similar News

News October 16, 2025

தஞ்சை: சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

image

மூர்த்தி அம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 34). இவர் நேற்று காலை தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் புலவர் நத்தம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விக்னேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதியது. இதில் கீழே விழுந்து தலையில் காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News October 16, 2025

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

2025ம் ஆண்டிற்கான மின்கம்பியாள் உதவியாளர் தகுதி காண் தேர்வு டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. தகுதி வாய்ந்த இளைஞர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தஞ்சாவூர் தொழிற்பயிற்சி மையத்தில் வழங்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News October 16, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (அக்.15) இரவு 10 மணி முதல் இன்று (அக்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!