News November 16, 2025

தஞ்சை: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள், <>இங்கே க்ளிக் <<>>செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப அடிப்படை சம்பளமாக ரூ.44,500 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 30.11.2025 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.nabard.org/careers அணுகவும். SHARE!

Similar News

News November 16, 2025

தஞ்சை அருகே விபசாரம்: 3 பேர் கைது

image

ஒரத்தநாடு அருகே வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேற்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒரு ஆண், பெண் மற்றும் புரோக்கராக செயல்பட்ட வீட்டின் பெண் உரிமையாளர் என 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News November 16, 2025

தஞ்சை: கஞ்சா விற்ற இளைஞர் கைது

image

தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த டூவீலர் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா கடத்திய லால்குடியை சேர்ந்த ரெனால்டு என்பவரையும் கைது செய்தனர்.

News November 16, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (நவ.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!