News November 5, 2025
தஞ்சை மீனவர்கள் 3 பேர் விடுவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் இருந்து கடந்த அக்.16-ம் தேதி ராஜா, முரளி, குமார் ஆகிய 3 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற போது, டீசல் தீர்ந்து போனதால் இலங்கை எல்லைக்குள் சென்றனர். இதையடுத்து 3 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், 3 பேரையும் படகுடன் இந்தியா கடற்படையிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கி உள்ளது.
Similar News
News November 5, 2025
தஞ்சை: நாளை மழை வெளுத்து வாங்கும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
தஞ்சை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
தஞ்சை: 300 கிலோ போதை பொருள் கடத்தல்

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்குகிடமாக வாகனங்களை சோதனை செய்ததில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தி வந்த கும்பகோணம், புளியம்போட்டையைச் சேர்ந்த சதீஷ் குமார், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விம்பாராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்த 296 கிலோ குட்கா போதைப்பொருட்கள், 2 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


