News October 12, 2025
தஞ்சை: மின்சாரம் தாக்கி விவசாயி பலி

ஒரத்தநாடு பகுதியில் நேற்று மாலை கனமழை பெய்தது. இந்நிலையில் மூர்த்தியம்பாள்புரம் தெற்குகாட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பவர் மாடுகளுக்கு தீவனம் வைக்கச் சென்றுள்ளார். அப்போது கொட்டைகையில் இரும்பு கம்பியை தொட்டதாகக் கூறப்படுகிறது. அதில் மின்சாரம் தாக்கி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 4, 2026
தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளார். இதன் காரணமாக பாதுகாப்பு காரணம் கருதி வருகிற 5-ம் தேதி அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு 10 முதல் இன்று (மார்ச்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 3, 2026
தஞ்சை: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

தஞ்சை மக்களே, <


