News February 26, 2025

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தின் நியாய விலை கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும்AAYமற்றும் PHHகுடும்ப அட்டையினர்28.02.2025க்குள் கைவிரல் ரேகை பதிவு (e-KYC) செய்யுமாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். AAYமற்றும்PHHபயனாளிகள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடையில் பதிவு செய்ய வேண்டும்.

Similar News

News April 10, 2026

இரண்டு தொகுதிகளில் ஒரே பெயரில் இரு வேட்பாளர்கள்!

image

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் அனீஸ் பாத்திமா என்ற பெயரில் 2 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் அண்ணாதுரை என்ற பெயரில் 2 பேரும் போட்டியிடுகின்றனர். மாவட்டம் முழுவதும் 8 தொகுதிகளிலும் 214 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 107 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 13 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். மீதம் 94 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர்.

News April 10, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியரின் முக்கிய உத்தரவு

image

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.10) வருவதால், கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள 7 டாஸ்மாக் மதுக்கடைகளை ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியரும், தஞ்சை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

News April 10, 2026

தஞ்சை: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை-APPLY NOW!

image

தஞ்சை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!