News August 8, 2024

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 19, 2025

தஞ்சை: அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு

image

திருச்சியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்( 52). இவர் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று விட்டு அங்கு உள்ள மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நடுப்படுகை தெற்கு வாய்க்கால் கரை தெருவை சேர்ந்த குட்டி என்ற பிரவீன் (28), பாலகிருஷ்ணனை வழிமறித்து அரிவாளைக் காட்டி மிரட்டி அவர் கையில் இருந்த ரூ.500-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் காவல்துறையினர் பிரவீனை கைது செய்தனர்.

News October 19, 2025

தஞ்சை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

தஞ்சை மாவட்டத்தில் 91 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க.<<>>
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 19, 2025

தஞ்சை: பாதுகாப்பு பணியில் 1,400 காவலர்கள்

image

தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலுள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதையொட்டி, மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும், திருட்டை தடுப்பதற்கும் கடை வீதிகள், முதன்மைச் சாலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் தலைமையில் ஏறத்தாழ 1,400 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!