News December 27, 2025
தஞ்சை: மருத்துவமனையில் பாலியல் தொல்லை!

கும்பகோணம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி உறவினர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவியாக உறவினருடன் இருந்துள்ளார். இந்நிலையில் தூங்கிகொண்டிருந்த சிறுமியிடம் ராமகிருஷ்ணன் (22) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்க அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 28, 2025
தஞ்சை: பாலியல் குற்றவாளி அதிரடி கைது

கேரளாவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தஞ்சையை சேர்ந்த வாலிபர் பாலாஜி (26), 2 மாத தேடலுக்குப் பிறகு தஞ்சையில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது சிறுமியுடன் பழக்கமேற்பட்டு, அவரை பாலாஜி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாலாஜி மீது கொலை முயற்சி, திருட்டு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 28, 2025
தஞ்சை: பாலியல் குற்றவாளி அதிரடி கைது

கேரளாவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தஞ்சையை சேர்ந்த வாலிபர் பாலாஜி (26), 2 மாத தேடலுக்குப் பிறகு தஞ்சையில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது சிறுமியுடன் பழக்கமேற்பட்டு, அவரை பாலாஜி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாலாஜி மீது கொலை முயற்சி, திருட்டு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 28, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் நியமனம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.27) இரவு 10 மணி முதல் இன்று (டிச.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் (அ) 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்!


