News January 15, 2026

தஞ்சை: பொங்கல் சீர் கொண்டு சென்றவர் பரிதாப பலி

image

ஒரத்தநாடு சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசு (49), தனது குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு பொங்கல் சீர் கொடுக்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சிற்றம்பலம் அம்மாகுளம் அருகே எதிரே வந்த கார் மோதியதில், திருநாவுக்கரசு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 9, 2026

தஞ்சை: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

தஞ்சை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் செய்து<<>> ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 9, 2026

கோடைக்கால கால்நடை பராமரிப்பு குறித்து அறிவுறுத்தல்

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கோடைக்கால கால்நடை பராமரிப்பு குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். “வெப்ப அயற்சியைத் தடுக்க கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்; மாடுகள் அதிக தண்ணீர் குடிக்கத் தீவனத்தையோ அல்லது உப்புக் கட்டிகளையோ பயன்படுத்தலாம்; காலை 6-10, மாலை 3-7 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்” என கூறியுள்ளார்.

News April 9, 2026

தஞ்சை: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!