News April 25, 2024

தஞ்சை: பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி 2 பேர் பலி

image

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வேம்பக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர்கள் ஜெகன்(30), பாக்யராஜ்(39). இவர்கள் இருவரும் நேற்று(ஏப்.23) பைக்கில் தஞ்சை-விக்ரவாண்டி நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது, வேம்பக்குடி அருகே வந்தபோது எதிரே திருச்சியில் இருந்து கும்பகோணம் சென்ற சரக்கு ஆட்டோ மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Similar News

News August 14, 2025

தஞ்சை வந்தடைந்த 2736 டன் உரங்கள்

image

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்குத் தேவையான உரம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் மற்றும் சரக்கு ரயில்களில் கொண்டு வரப்படுகிறது. அதன்படி ஒடிசாவில் இருந்து சரக்கு ரயிலின் 29 வேகன்களில் 1,800 டன் காம்ளக்ஸ், டி.ஏ.பி. உரம் தஞ்சை ரயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. இதேபோல் சென்னையில் இருந்து 936 டன் யூரியா உரம் தஞ்சை ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

News August 14, 2025

தஞ்சாவூர்: VAO லஞ்சம் கேட்டால் இதை செய்ங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சாவூர் மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News August 14, 2025

தஞ்சாவூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

image

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதில் தமிழகத்திற்கு மட்டும் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>>, வரும் ஆக.17-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு <<17399815>>CLICK HERE<<>>. அரசு வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!