News March 9, 2026
தஞ்சை: பேருந்து தடம்புரண்டு விபத்து

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த தனியார் பேருந்து, நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரி அருகே விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. பேருந்தின் சக்கரங்களுக்கு இடையேயான இரும்புத் தகடு உடைந்ததால் வாகனம் நிலைதடுமாறி அருகிலுள்ள பள்ளத்தில் பாய்ந்தது. இந்த நிலையில், ஓட்டுநர் சமர்த்தியதால் அனைவரும் உயிர்தப்பினர். பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
தஞ்சை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
தஞ்சாவூர்: பறிமுதல் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பறிமுதல் வாகனங்களை மாா்ச் 13-ம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூா் நீதிமன்றச் சாலை, பழைய ஆயுதப் படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அறிவித்துள்ளார்.
News March 9, 2026
தஞ்சை மாவட்டத்தில் 21 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

தஞ்சை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலையொட்டி 21 தாசில்தார்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் துணை தாசில்தார்கள், சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வரும் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு பணியிடமாற்றம், பதவி உயர்வுடன் பணியிட மாற்றமும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பிறப்பித்துள்ளார்.


