News February 6, 2026

தஞ்சை: பெருமாள் கோயில் நாமம் மாற்றக் கோரிய மனு

image

தஞ்சை மாவட்டம் வல்லம் நரசிங்கப் பெருமாள் கோயிலில் தென்கலை நாமத்தை அகற்றி, வடகலை நாமத்தை நிறுவக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. குடமுழுக்கு நெருங்கும் வேளையில், போதிய ஆதாரமின்றி வழக்குத் தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகளை அணுகாமல் விளம்பர நோக்கத்திற்காக நீதிமன்றம் வந்ததை நீதிபதி கண்டித்தார்.

Similar News

News February 11, 2026

தஞ்சாவூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

தஞ்சாவூர் மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News February 11, 2026

தஞ்சாவூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

சத்துணவு பணியாளர்களுக்கு திமுகவினர் ஆதரவு

image

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு சத்துணவு பணியாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியருக்கு அகவிலைப்படி தேசிய மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சரவணன் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்

error: Content is protected !!