News October 24, 2024
தஞ்சை பெரிய கோயிலில் ரூ. 48. 77 லட்சம் காணிக்கை

தஞ்சை பெரிய கோவில் உண்டியல்கள் மாதந்தோறும் , எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், 11 உண்டியல்கள் அறநிலையத் துறை அலுவலர்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இப்பணியில் வங்கி ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதன் மூலம் பக்தர்கள் ரூ. 48 லட்சத்து 77 ஆயிரத்து 462 ரொக்கமும், 35 கிராம் தங்கமும், 302 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியது தெரியவந்துள்ளது
Similar News
News February 3, 2026
தஞ்சை: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

தஞ்சை மாவட்ட மக்களே இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இசேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை SHARE பண்ணுங்க.
News February 3, 2026
தஞ்சாவூரில் 502 கிலோ குட்கா பறிமுதல்

தஞ்சாவூரில் கரந்தை அருகே கோடியம்மன் கோயில் பகுதியில் நேற்று காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் குட்கா விற்றுக் கொண்டிருந்த விருதுநகர் செல்வராஜ் (40) மற்றும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.ஆதில் (22) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்து 502 கிலோ குட்கா, ஒரு கார், போலி பதிவு எண் தகடு, 2 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
News February 3, 2026
தஞ்சை: மாணவியின் புகைப்படத்தை பரப்பியவர் கைது

கும்பகோணம் தாராசுரம் பகுதியை சேர்ந்த மெக்கானிக் சஞ்சய், 10-ம் வகுப்பு மாணவியுடன் பழகியதாக புகார் எழுந்தது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில், சஞ்சய் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும், படிக்க விடாமல் தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சஞ்சயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


