News December 26, 2025
தஞ்சை: பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்கு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே குலமங்கலம் மாரியம்மன் கோயில் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட கவியரசன்(48), திருநாவுக்கரசு(38), பிரசாந்த்(34), ரமேஷ்(39), வசந்தகுமார்(36), நித்துவான்(34) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News December 28, 2025
தஞ்சை: SBI வங்கியில் வேலை அறிவிப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் (ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
தஞ்சாவூா் மாவட்ட நிர்வாகம் முக்கிய தகவல்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த பருவமழையின் காரணமாக பாதிப்படைந்த பயிர்களை வேளாண் துறை, வருவாய்த் துறையினா் கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வந்தனா். இதன் மூலம், 9 ஆயிரத்து 833 ஏக்கரில் பயிா்கள் மழையால் 33 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு என்பது தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக நிவாரணம் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
News December 28, 2025
தஞ்சை: பாலியல் குற்றவாளி அதிரடி கைது

கேரளாவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தஞ்சையை சேர்ந்த வாலிபர் பாலாஜி (26), 2 மாத தேடலுக்குப் பிறகு தஞ்சையில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது சிறுமியுடன் பழக்கமேற்பட்டு, அவரை பாலாஜி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாலாஜி மீது கொலை முயற்சி, திருட்டு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


