News September 8, 2025
தஞ்சை: நீதிமன்றத்தில் பரபரப்பான தீர்ப்பு

செப் 8, 2025 கும்பகோணம் மாங்குடி அருகே நடந்த கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் முக்கிய குற்றவாளியான பெண் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர் மீனா மற்றும் நீதிமன்ற காவலர் சரோஜினி உதவி காவல் கண்காணிப்பாளர் மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டினர்.
Similar News
News September 9, 2025
தஞ்சை: Canara வங்கியில் வேலை! Apply பண்ணுங்க !

தஞ்சை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா Bank-யில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் Bank வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் இங்கே <
News September 9, 2025
தஞ்சை: மாவட்ட ஆட்சியரிடம் கம்யூனிஸ்ட் கட்சி மனு

தஞ்சாவூர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமையில், மணக்கரம்பை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியல் இனக் குடும்பங்களுக்கு மனைப் பட்டா, வீடுகள், அடிப்படை வசதிகள் வழங்கவும், புறம்போக்கு நிலங்களை மீட்டு குடியிருப்பு ஏற்பாடுகள்செய்யவும் கோரிக்கை வைத்தனர்.
News September 9, 2025
தஞ்சை கலெக்டர் கொடுத்த முக்கிய அப்டேட்!

தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சுற்றுலா நிறுவனங்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சிறந்த உள்ளூர் (ம) வெளிநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகிறது. தகுதி உடையவர்கள் வருகிற 15 ஆம் தேதிக்குள் www.tntourisamawards.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளார். SHARE IT