News October 18, 2025

தஞ்சை: தீபாவளி ஆஃபர்-மக்களே உஷார்!

image

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 18, 2025

தஞ்சாவூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

தஞ்சை: குடும்ப சொத்தில் கவனிக்க வேண்டியவை!

image

தஞ்சை மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும் கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையேன்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குறவங்களும் இத சரிபார்த்து வாங்குங்க…SHARE பண்ணுங்க..

News October 18, 2025

தஞ்சை: கஞ்சா வியாபாரி கொலை; அதிரடி தீர்ப்பு!

image

தஞ்சாவூரில் கடந்த மார்ச் 25, 2023 அன்று கஞ்சா வாங்கச் சென்றபோது, வியாபாரி பிரதீப் தர மறுத்ததால் அவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கொலை செய்த விக்னேஷ், சிவகுமார், சூரியா ஆகிய மூவருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

error: Content is protected !!