News November 11, 2025

தஞ்சை: டூவீலர் விபத்தில் இளைஞர் பரிதாப பலி

image

திருச்சி பழையக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து (35). இவர் கிறிஸ்டி என்பவருடன் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில் செங்கிப்பட்டி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, சரவணன் என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவர் மீது டூவீலர் மோதியதில் கீழே விழுந்த பிச்சைமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். கிறிஸ்டி, சரவணன் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News November 11, 2025

தஞ்சை மக்களே, முற்றிலும் இலவசம்!

image

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், <>இங்கே கிளிக் <<>>செய்து அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க!

News November 11, 2025

தஞ்சை: 500 கிலோ போதை பொருள் பறிமுதல்

image

பட்டுக்கோட்டை செம்பரான் குளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது, அதில் 500 கிலோ அளவுக்கு குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரா பெனிவால் (19), நரனாராம் (23) ஆகியோரை கைது செய்தனர்.

News November 11, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(நவ.10) இரவு 10 மணி முதல் இன்று(நவ.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!