News March 31, 2026
தஞ்சை: டாஸ்மாக் இயங்காது – ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் இன்று (மார்ச்.31) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மது கூடங்கள் அனைத்தும் இயங்காது. மேலும் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும், ஆணையை மீறும் மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2026
தஞ்சை: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தஞ்சை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News April 9, 2026
கோடைக்கால கால்நடை பராமரிப்பு குறித்து அறிவுறுத்தல்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கோடைக்கால கால்நடை பராமரிப்பு குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். “வெப்ப அயற்சியைத் தடுக்க கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்; மாடுகள் அதிக தண்ணீர் குடிக்கத் தீவனத்தையோ அல்லது உப்புக் கட்டிகளையோ பயன்படுத்தலாம்; காலை 6-10, மாலை 3-7 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்” என கூறியுள்ளார்.
News April 9, 2026
தஞ்சை: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


