News February 20, 2026
தஞ்சை: சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்!

திருக்காட்டுப்பள்ளி, வளப்பக்குடி மெயின்ரோட்டில் வசித்து வரும் காட்டுராஜா – பாப்பாயி தம்பதியினரின் மகன் சசிகுமார் (7). இந்த சிறுவன் நேற்று காலை பணிக்கு சென்ற தாயை பார்க்க நடந்து சென்றுள்ளார். அப்போது, செல்லும் வழியில் வெறி நாய் ஒன்று சசிகுமாரை கடித்து குதறியுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News February 20, 2026
தஞ்சை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

தஞ்சை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 20, 2026
தஞ்சை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

தஞ்சை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..
News February 20, 2026
தஞ்சை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தஞ்சை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


