News October 16, 2025
தஞ்சை: சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

மூர்த்தி அம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 34). இவர் நேற்று காலை தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் புலவர் நத்தம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விக்னேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதியது. இதில் கீழே விழுந்து தலையில் காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News October 16, 2025
தஞ்சை: கஞ்சா விற்பனையில் ஐந்து நபர்கள் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் அதே பகுதியை சார்ந்த தாஸ், ராஜமாணிக்கம், அஸ்வின், சஞ்சய், வீரமணி ஆகியோரின் இல்லங்களில் சோதனை நடத்தியதில் 1.100 கிலோ கஞ்சா, கஞ்சா விற்ற பணம் ரூ.15,000 கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட 5 நபர்களை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
News October 16, 2025
தஞ்சை: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News October 16, 2025
தஞ்சை: 6 பேர் மீது பாயிந்த குண்டர் சட்டம்

ஆடுதுறை பேரூராட்சி தலைவரும் – பாமக நிர்வாகியுமான ம.க.ஸ்டாலினை சணல் வெடிகுண்டு வீசி கொலை செய்யும் முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய், மருதுபாண்டி, மகேஷ், சேரன், விஜய், ஆகாஷ் ஆகிய ஆறு பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.