News December 4, 2025
தஞ்சை: குழந்தை இல்லாத சோகத்தில் தற்கொலை!

தஞ்சாவூர் மாவட்டம் மேல விசலூரை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினாலும் அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றதாலும் மனமுடைந்து நேற்று (டிச.02) இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
தஞ்சை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

டிட்வா புயலால் சேதம் அடைந்த வயல்களில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிா்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மழைக்காலங்களில் உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்
News December 6, 2025
தஞ்சை: தீக்கிரையான 4 கடைகள்

அம்மாபேட்டை அருகே பூண்டி மெயின் ரோடு, கடைவீதியில் முகம்மது இஸ்மாயில் என்பவர் நடத்திவரும் பேன்ஸி ஸ்டோர் கடையில் இரவு மின் கசிவால் திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீ அருகிலிருந்த விஜயகுமாரின் பஞ்சர் கடை, ரவியின் ஏஜென்சி மற்றும் சக்திவேலின் எர்த் மூவர்ஸ் உள்ளிட்ட கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
News December 6, 2025
தஞ்சை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை ஷேர் பண்ணுங்க!


