News October 18, 2025

தஞ்சை: கஞ்சா வியாபாரி கொலை; அதிரடி தீர்ப்பு!

image

தஞ்சாவூரில் கடந்த மார்ச் 25, 2023 அன்று கஞ்சா வாங்கச் சென்றபோது, வியாபாரி பிரதீப் தர மறுத்ததால் அவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கொலை செய்த விக்னேஷ், சிவகுமார், சூரியா ஆகிய மூவருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

Similar News

News October 18, 2025

தஞ்சாவூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

தஞ்சை: குடும்ப சொத்தில் கவனிக்க வேண்டியவை!

image

தஞ்சை மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும் கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையேன்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குறவங்களும் இத சரிபார்த்து வாங்குங்க…SHARE பண்ணுங்க..

News October 18, 2025

தஞ்சை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

தஞ்சை மாநகராட்சி வளாகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில், மரம் வெட்டும் கருவிகள், பொக்லின் எந்திரம், பேரிடர் மீட்பு கருவிகள் வைக்கப்பட்டு இருந்தன. இவற்றை நேற்று மேயர் சண்.ராமநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டு, 25 பேர் கொண்ட சிறப்பு குழு சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 18004251100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!