News October 27, 2025
தஞ்சை: உளவுத் துறையில் வேலை!

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 258
3. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
4. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
5. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
6. கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க…
Similar News
News October 27, 2025
தஞ்சை: இனி இதற்கு அலைய வேண்டாம்!

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.
இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News October 27, 2025
தஞ்சை: பாடலாசிரியர் சினேகன் தந்தை காலமானார்

மக்கள் நீதி மய்யத்தின் மாநில இளைஞர் அணி செயலாளரும் – திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர்.சினேகனின் தந்தை சிவசங்கு (102) இன்று (அக்.27) அதிகாலை 4:30 மணியளவில் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். மேலும் அவரது இறுதி சடங்கு நாளை காலை 11 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, கவிஞர் சினேகனின் சொந்த ஊரான புதுகரியப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
தஞ்சை: 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது!

ஒரத்தநாடு பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், சட்டவிரோத மது விற்பனை செய்த ஹேமலதா (48), ராஜலிங்கம் (28), மா.சேகர் (53), கோ.சேகர் (60), ராஜேந்திரன் (47), ராமசாமி (51), சித்ரா (55), குமார் செல்வம் (55) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 234 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


