News December 26, 2025

தஞ்சை: ஆற்றில் மூழ்கியவரை தேடும் பணி தீவிரம்!

image

தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டியை சேர்ந்த பாண்டியன்(41) என்பவர், கடந்த 22ம் தேதி கோயம்புத்தூரில் இருந்து வீட்டிற்கு வந்து, கல்லணைக்கால்வாய் ஆற்றில் குளிக்கும்போது தவறி விழுந்து மாயமானார். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடந்த 23ம் தேதி காலை முதல் தேடி வருகின்றனர். இந்நிலையில் 4 நாட்கள் ஆகியும் பாண்டியன் நிலை என்னவென்று தெரியாததால் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.

Similar News

News December 31, 2025

தஞ்சை: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி, அவருடைய வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (25) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.

News December 31, 2025

தஞ்சையில் மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை

image

பாபநாசம் தாலுகா உள்ளிக்கடை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிக்கும் 65 வயது மூதாட்டி, கூலி வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மும்மூர்த்தி (46) என்பவர், மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரின் பேரில், போலீசார் மும்மூர்த்தியை கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News December 31, 2025

தஞ்சை: பணம் மோசடி – அரசு ஊழியர் மீது புகார்

image

கும்பகோணத்தில் மாற்றூத்திறனாளியான மகாலட்சுமி, தனது மகள்களின் திருமணத்திற்காகச் சேமித்த ரூ.2.50 லட்சத்தை, அரசு ஊழியரான மணிகண்டன் என்பவர் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். 2019-ல் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தர மறுத்த மணிகண்டன், அதிகார பலத்தால் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் பணத்தை மீட்டு தர மகாலட்சுமி, கோரிக்கை மனு அளித்துள்ளார்.

error: Content is protected !!