News January 2, 2026
தஞ்சை: ஆயுளை நீடிக்கும் விஜயநாதேஸ்வரர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிஜயமங்கலத்தில் விஜயநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News January 5, 2026
தஞ்சை: உலக புகழ்பெற்ற ராஜகோபால பீரங்கி

தஞ்சையில் பெரும்பாலும் பலரும் அறிந்திடாத ஒன்று தஞ்சை ராஜகோபால பீரங்கி. சுமார் 400 ஆண்டு பழமைவாய்ந்த இந்த பீரங்கி நாயக்கர் காலத்தில் தஞ்சைக்குள் நுழையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 400ஆண்டுகள் ஆனா பின்பும் இப்பீரங்கி இன்றளவும் துருப்பிடிக்காமல் உள்ளது. உலக வரலாற்றில் சுடப்பட்ட பெரிய பீரங்கிகளில் இது 4வது பெரிய பீரங்கி ஆகும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 5, 2026
தஞ்சை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 5, 2026
தஞ்சை: ஒரே நாளில் 15 டன் கடல் மீன்கள் விற்பனை

தஞ்சை மாவட்டத்திலேயே கும்பகோணம் மீன் மார்க்கெட் முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு சாதாரண நாட்களில் 5 டன் மீன்களும், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் 20 டன் வரை மீன்களும் விற்பது வழக்கம். இந்நிலையில், தமிழகம் மற்றும் கேரள கடலோரப் பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் 15 டன் கடல் மீன்கள் கொண்டுவரப்பட்டு ஒரே நாளில் வேகமாக விற்பனை செய்யப்பட்டது.


