News October 26, 2025
தஞ்சை: ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே எட்டுபுலிகாடு அரசு நடுநிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நேற்று (அக்.25) பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் பள்ளியின் ஆசிரியர் பாஸ்கர், அவருக்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியர் விஜயா ஆகிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News February 5, 2026
தஞ்சை: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <
News February 5, 2026
தஞ்சை: மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண்

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை வித்யாநகரைச் சேர்ந்த அனீஷ் பாத்திமா நேற்று தன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கணவரைப் பிரிந்து காலணி கடை நடத்தி வந்த இவர், தன் மகள்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பிய நிலையில், பிற்பகலில் உறவினர் ஒருவர் வந்து பார்த்தபோது படுக்கை அறையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதையடுத்து மருத்துவக் கல்லூரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 5, 2026
தஞ்சை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லி<


