News December 18, 2025

தஞ்சை அருகே கிரேன் மோதி மூதாட்டி பலி

image

ஒரத்தநாடு தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த ஏலாம்பாள். தனது வீட்டில் இருந்து நடந்து கடைக்குச் சென்றபோது, ஒரத்தநாட்டிற்கு மின்சாரப் பணிக்காக வரவழைக்கப்பட்ட கிரேன் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 19, 2025

தஞ்சை: மது போதையில் இளைஞர் வெட்டி படுகொலை

image

தஞ்சை, அம்மாகுளத்தில் சிராஜீதீன் என்பவரும் – பிரதீப் என்பவரும் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது பிரதீப் தீப்பெட்டி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பிரதீப் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிராஜீதீனை சரமாரியாக வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த சிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரதீபை கைது செய்தனர்.

News December 19, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.18) இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

News December 19, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.18) இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!