News October 18, 2025
தஞ்சை: அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் உள்ள நாராயணசாமி சிலை அருகே கடந்த 16-ந்தேதி அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் பிணம் கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் யார் இவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதை தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
தஞ்சாவூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News October 18, 2025
தஞ்சை: குடும்ப சொத்தில் கவனிக்க வேண்டியவை!

தஞ்சை மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும் கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையேன்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குறவங்களும் இத சரிபார்த்து வாங்குங்க…SHARE பண்ணுங்க..
News October 18, 2025
தஞ்சை: கஞ்சா வியாபாரி கொலை; அதிரடி தீர்ப்பு!

தஞ்சாவூரில் கடந்த மார்ச் 25, 2023 அன்று கஞ்சா வாங்கச் சென்றபோது, வியாபாரி பிரதீப் தர மறுத்ததால் அவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கொலை செய்த விக்னேஷ், சிவகுமார், சூரியா ஆகிய மூவருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.