News December 23, 2024
தஞ்சையில் வங்கி அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று டிசம்பர் 23 திங்கள்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் தலைமையில் வங்கியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வங்கி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வங்கி அலுவலர்களுடன் கடன் கொடுப்பது, கடன் வசூலிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது
Similar News
News August 22, 2025
தேசிய கொடியை அவமதித்த நபர் கைது

கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைத்தீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவிந்த வல்லப பந்துலு என்பவர், நாச்சியார் கோவில் பகுதியில் 8 குளங்களை காணவில்லை என பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, தனது இடுப்பில் தேசிய கொடியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது தேசிய கொடிய அவமதித்ததாக வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.
News August 22, 2025
தஞ்சாவூரில் விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான, விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுப்பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News August 22, 2025
தஞ்சாவூர்: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்!

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <