News November 28, 2024

தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: 2 இளைஞர்கள் கைது

image

திருவிடைமருதூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைப்பயிற்சி சென்ற மணிமேகலை(62) என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் தாக்கி நகைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அகமதுயாசின் (20) மற்றும் ஏசுகவிபாலன் (21) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 7 சவரன் தங்கநகை மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 19, 2025

தஞ்சை: ஆட்டோ வாங்க 3 லட்சம் உதவி!

image

தஞ்சை மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.

News December 19, 2025

தஞ்சை: மது போதையில் இளைஞர் வெட்டி படுகொலை

image

தஞ்சை, அம்மாகுளத்தில் சிராஜீதீன் என்பவரும் – பிரதீப் என்பவரும் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது பிரதீப் தீப்பெட்டி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பிரதீப் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிராஜீதீனை சரமாரியாக வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த சிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரதீபை கைது செய்தனர்.

News December 19, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.18) இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!