News October 25, 2025
தஞ்சையில் போலீசார் மீது தாக்குதல் முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் கேட்டு பணியிலிருந்த செவிலியரிடம், செல்வகுமார் (34) என்பவர் தகராறு செய்துள்ளார். மேலும், இதுகுறித்து விசாரணை செய்ய வந்த போலீஸ் ஏட்டு ஆனந்தனையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News October 25, 2025
தஞ்சை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 25, 2025
தஞ்சை: வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து நேற்று பகலில் வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படுகிறது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பில் 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் பயில வாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவுகளில் பயின்ற மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் அக் 31-க்குள் நேரில் விண்ணப்பித்து பயனடையுமாறு தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.


