News November 14, 2024

தஞ்சையில் புதிதாக மலிவு விலை மருந்தகம் திறப்பு

image

இந்தியாவில் இதுவரை 14 ஆயிரத்து 300 மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 1,270 கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 53 கடைகள் உள்ளன.இந்நிலையில், தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் மலிவு விலை மருந்தகத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.

Similar News

News August 21, 2025

தஞ்சாவூர்: தமிழ்நாடு காவல்துறையில் வேலை!

image

தஞ்சாவூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து நாளை முதல் விண்ணப்பிக்கலாம். போலீஸ் ஆகவேண்டுமென லட்சியம் உள்ளவர்களுக்கு SHARE பண்ணு

News August 21, 2025

தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி சோ்க்கை வழிகாட்டும் முகாம்

image

மாணவா்களுக்கு உயா் கல்வி சோ்க்கையில் ஏற்படும் குறைபாடுகளைக் களைந்து தீா்வு காணும் வகையில், தஞ்சை ஆட்சியரகத்திலுள்ள மக்கள் குறைதீர் கூட்டரங்கத்தில் நாளை (ஆக.22) காலை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி குறைதீர் முகாம் நடைபெற உள்ளது
என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

தஞ்சை: விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி கட்டாயம்

image

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆக.20) நடைபெற்றது. இதில், விநாயகா் சதுா்த்தியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய கோட்டாட்சியரின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

error: Content is protected !!