News December 16, 2025
தஞ்சையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வடவாறு பாலம் அருகே சுற்றித் திரிந்த திவாகர், புருஷோத்தமன், ஷ்யாம் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 20, 2025
தஞ்சாவூர்: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 2,06,503 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
தஞ்சை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவைக்காவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், அரவிந்தராஜ், ஹரிராஜா, வெங்கடேசன், ஜெயவேல் ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
News December 20, 2025
தஞ்சை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர், திருமலைசமுத்திரம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, சேதுபாவச்சத்திரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (டிச.20) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


