News April 7, 2025

தஞ்சையில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை

image

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காவேரி செல்வி. கடந்த 2023 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது தஞ்சாவூர் ஆயுதப்படை காவலில் பணிபுரிந்து வந்த நிலையில், இதற்காக தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 10, 2025

தஞ்சையில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் நாளை (வியாழன்) அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்றுள்ள மதுபான கடைகளும், மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

தஞ்சையில் முதலைகள் பாதுகாப்பு மையம், அமைச்சர் அறிவிப்பு

image

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தஞ்சை மாவட்டம் அணைக்கரை பகுதியில் முதலைகள் அதிகம் இருப்பதால் இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது எனும் காரணத்தினால் முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்க ரூபாய் 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.

News April 9, 2025

கோடி நலம் தரும் தஞ்சை கோடியம்மன் ஆலயம்

image

தஞ்சை – திருவையாறு செல்லும் வழியில் இந்த கோடியம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள அம்மன் கோடி அவதாரம் எடுத்து அரக்கர்களை வதம் செய்ததால் இந்த அம்மனுக்கு கோடியம்மன் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. திருமண தடை, மகப்பேறு கிடைக்க பெண்கள் வழிபடுகின்றனர். மேலும் இந்த அம்மனை வணங்கினால் கண் திருஷ்டி, பணக் கஷ்டம் போன்ற அனைத்தும் நீங்கும் என கூறுகின்றனர். இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!