News August 18, 2025

தஞ்சையில் அடையாள தெரியாத ஆண் சடலம்

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இராஜாமடம் கிளைவாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஒரத்தநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எவ்வாறு இறந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 3, 2026

தஞ்சை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

கோடைக் காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சியில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

News April 3, 2026

தஞ்சை மாவட்டத்தில் 28 பேர் வேட்புமனு தாக்கல்

image

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் இரண்டாம் நாளான நேற்று 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடக்க நாளான மார்ச் 30ம் தேதி 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதும் மொத்தம் 28 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

News April 3, 2026

தஞ்சை: காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திமுக-வுக்கு ஆதரவு

image

ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக ஆர். வைத்திலிங்கம் போட்டியிட உள்ளார். இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ். பழனியப்பன், அவரை ஒரத்தநாட்டில் சந்தித்து, சங்கத்தின் ஆதரவை தெரிவித்துக் கொண்டார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!