News July 5, 2025

தஞ்சை:மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

image

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூலை 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். Share It Now

Similar News

News July 5, 2025

தஞ்சை: 12th போதும், ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தது 12-ஆம் வகுப்பு முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட நபர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து வரும் ஜூலை.18-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.

News July 5, 2025

தஞ்சை: மனை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு?

image

தஞ்சை மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள்<> onlineppa.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 5, 2025

தஞ்சை: விஷம் குடித்து மாணவி தற்கொலை

image

ஆடுதுறை அருகே உள்ள நரசிங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகள் புவனேஸ்வரி (வயது 19). புவனேஸ்வரி அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (30) என்பவர் வீட்டில் பால் ஊற்றி வந்துள்ளார். அப்போது புவனேஸ்வரியிடம், குணசேகரன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விடாமல் வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். போலீசார் குணசேகரனை கைது செய்தனர்.

error: Content is protected !!