News August 20, 2024

தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

image

மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு 18,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால், தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஆழமான பகுதிகளில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆழமான பகுதிக்கு செல்லாமல் பாதுகாக்கவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீர் நிலைகளில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என தஞ்சை கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News March 9, 2026

தஞ்சை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

தஞ்சாவூர்: பறிமுதல் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பறிமுதல் வாகனங்களை மாா்ச் 13-ம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூா் நீதிமன்றச் சாலை, பழைய ஆயுதப் படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அறிவித்துள்ளார்.

News March 9, 2026

தஞ்சை மாவட்டத்தில் 21 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

image

தஞ்சை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலையொட்டி 21 தாசில்தார்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் துணை தாசில்தார்கள், சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வரும் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு பணியிடமாற்றம், பதவி உயர்வுடன் பணியிட மாற்றமும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!