News January 6, 2026
தஞ்சாவூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூரில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குறைகளைக் கேட்டறியும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், ஜனவரி 8ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட குறைகள் மற்றும் ஆலோசனைகளை நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்!

தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற உள்ளதால், வரும் மார்ச் 9-ம் தேதி முதல், கும்பகோணம் – திருவையாறில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கீழவாசல் வழியாக செல்ல வேண்டும். இதேபோல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் மேலவீதி, பழைய திருவையாறு சாலை வழியாக செல்ல வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News March 7, 2026
தஞ்சை: விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் கரும்பு அரவை நடைபெற்று வருகிறது. நடப்பு அரவைப்பருவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பரப்பிலிருந்து 1,45,000 மெ.டன்கள் அரவை செய்ய திட்டமிடப்பட்டு 4-ம் தேதி வரை 1,11,368 மெ.டன்கள் அரவை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆலை அரவை 12-ம் தேதி நிறைவு செய்ய உள்ளதால் ஆலைக்கு பதிவு செய்து, விவசாயிகள் கரும்புகளை விரைந்து அனுப்ப ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.6) இரவு 10 முதல் நாளை (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


