News September 3, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் 48 புதிய மின்மாற்றிகள் மாற்றம்

நடப்பாண்ட்டில் 48 புதிய மின்மாற்றிகள் ஒரு கோடியை 68 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 2024 – 2025ம் ஆண்டு இலக்கீட்டின் படி சாதாரண திட்டத்தில் 57 மின் இணைப்புகளும், தட்கல் திட்டத்தில் 254 மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 5, 2025
தஞ்சாவூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

தஞ்சாவூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News September 5, 2025
தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை பகுதிகள்

தஞ்சாவூரில் இயங்கி வரும் துணை மின் நிலையங்களில் நாளை செப்.06 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் ⏩தஞ்சாவூர், ⏩பாபநாசம், ⏩அய்யம்பேட்டை, ⏩மெலட்டூர், ⏩சாக்கோட்டை, ⏩கும்பகோணம் ரூரல்,⏩ பூண்டி, ⏩சாலையாமங்கலம், ⏩திருப்புறம்பியம் ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரவு மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் SHARE பண்ணுங்க!
News September 5, 2025
தஞ்சாவூர் விவசாயிகளுக்கு Good News!

தஞ்சாவூர், திருவோணம் வட்டாரத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் சிறு, குரு விவசாயிகள் அனைவருக்கும் மண்புழு உர தொட்டி அரசு மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இதனை ரூ.540 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஆதார், கணினி சிட்டா, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உடன் வேளாண்துறையை அணுகி பெற்று கொள்ளலாம் என திருவோணம் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மற்றவர்களும் SHARE பண்ணுங்க!