News December 12, 2025
தஞ்சாவூர்: டிராக்டர் வாங்க மானியம் வேண்டுமா?

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
Similar News
News March 4, 2026
தஞ்சை: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 4, 2026
தஞ்சாவூர்: முதல்வருக்கு நன்றி தெரிவித்த விஜய்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், தனது ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்டினார். அப்போது தனக்கு ஆதரவாக பேசிய பலருக்கும், குறிப்பாக முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் அப்போது பூசி மொழுகுவது போல் பேசியதாகக் குறிப்பிட்ட விஜய், அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
News March 4, 2026
தஞ்சை: கல்விச் செலவை அரசே ஏற்கும் – விஜய்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 04) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது விஜய் பேசுகையில், 2 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பிள்ளைகளின் மருத்துவம், பொறியியல் படிப்புக்கான கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்கும் என வாக்குறுதி அளித்துள்ளார்.


