News June 25, 2024
தஞ்சாவூர் எம்.பி. ஆனார் முரசொலி

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முரசொலி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News December 21, 2025
தஞ்சை: போலி கணக்கு – போலீசார் எச்சரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பெயரில் போலியான Facebook முகநூல் தொடங்கப்பட்டுள்ளது. அந்த முகநூலில் ஏராளமான பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையின் சார்பாக இது போலியான முகநூல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கணக்கை யாரும் பின் தொடர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 21, 2025
தஞ்சை: போலி நகைகளை அடகு வைத்து மோசடி

திருவையாறு, கண்டியூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் அடகு கடையில் போலி தங்க நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் காரைக்கால் பகுதியை சேர்ந்த சிவா(26), ஸ்ரீராம் (21) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.
News December 21, 2025
தஞ்சை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

தஞ்சை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <


