News June 25, 2024

தஞ்சாவூர் எம்.பி. ஆனார் முரசொலி

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முரசொலி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

Similar News

News December 17, 2025

தஞ்சை: ஒரே நாளில் 3 வீடுகளில் திருட்டு!

image

கபிஸ்தலம் பட்டவர்த்தியில் வெங்கடேசன், மணிகண்டன், சைபுனிஷா ஆகியோரின் வீடுகளில் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. வெங்கடேசன் வீட்டில் 2 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி திருடு போனது. அதே போல் மணிகண்டன் வீட்டில் 3.5 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கமும், சைபுனிஷா வீட்டில் ரூ. 40 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் கொலுசுகளும் திருடு போயுள்ளன. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 17, 2025

தஞ்சை: கிரேன் மோதி பரிதாப பலி!

image

ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் ஏலம்பாள் (75), இவர் நேற்று காலை வீட்டில் இருந்து நடந்து கடைக்கு சென்று உள்ளார். அப்போது ரோட்டை கடந்து சென்றபோது, தஞ்சையில் இருந்து ஓரத்தநாட்டிற்கு மின்சார பணிக்காக வரவழைக்கப்பட்ட கிரேன் எதிர்பாராதவிதமாக ஏலம்பாள் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News December 17, 2025

தஞ்சை: சிகிச்சைக்கு செல்லும் வழியில் மூச்சு திணறி பலி

image

பாபநாசம் அருகே தென்னஞ்சோலை பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம், உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது மனைவி குணவதியை சிகிச்சைக்காக காரில் அழைத்து செல்லும் வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் காரிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!