News July 24, 2024
தஞ்சாவூர்: உயர் பதவிகளை அலங்கரிக்கும் பெண்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக ப்ரியங்கா பங்கஜம், நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளராக மோகனா, வ.கோட்டாட்சியர்கள் இலக்கியா, ஜெயஸ்ரீ, பூர்ணிமா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, கூட்டுறவு சங்க பதிவாளர் தமிழ்நங்கை , உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சித்ரா, வேளாண் இணை இயக்குநர் சுஜாதா ஆகியோர் உயர் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர்.
Similar News
News April 7, 2026
தஞ்சை: பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் பிரச்சாரம்

அதிமுக கூட்டணியில் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக ரயிலடி பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அதிமுக மாநகர செயலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News April 7, 2026
தஞ்சை: இடி தாக்கி மீனவர் உயிரிழப்பு

அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை ஊராட்சியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது காலை 6 மணியளவில் இடி விழுந்ததில் கடலில் வலையில் சிக்கிய நிலையில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கடலோர காவல் படை போலீசார் உடலை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இடி தாக்கி மீனவர் உயிரிழந்த இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 6, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.6) இரவு 10 முதல், நாளை (ஏப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


