News March 21, 2024
தஞ்சாவூர்: இளைஞர் கொலை… அதிரடி தீர்ப்பு

திருவிடைமருதூர் தாலூகா ஆவணியாபுரத்தில் இன்ஜினியரிங் மாணவர் முஹம்மது முன்தஸிரை (19), காதல் விவகாரத்தில் நண்பர்களே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் இஜாஸ் அகமது (20), ஜலாலுதீன் (19), சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலை வழக்கில் இஜாஸ் அகமது, ஜலாலூதின் ஆகியோருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Similar News
News November 23, 2025
தஞ்சை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

தஞ்சை மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.!
News November 23, 2025
தஞ்சை: 10th போதும்… அரசு வேலை ரெடி!

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு இங்கே <
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்க.
News November 23, 2025
தஞ்சை: வாகனம் மோதி பரிதாப பலி!

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


