News August 15, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 16, 2025

தஞ்சாவூரில் பலரும் அறிந்திடாத கடற்கரை!

image

தஞ்சையில் அமைந்துள்ள மனோரா கடற்கரை பலரும் அறிந்திடாத கடற்கரையாகும். இக்கடற்கரையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மனோரா கோட்டையும் கலங்கரை விளக்கமும் அமைந்துள்ளதுள்ளது. இந்த கோட்டை, 1814-1815 காலகட்டத்தில் நெப்போலியன் போனபார்ட்டின் படையை ஆங்கிலேயப் படை முறியடித்ததை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்டதாகும். மேலும் இங்கு வீசும் இயற்கையான காற்று பலருக்கும் பிடித்த ஒன்றாகவுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 15, 2025

தஞ்சை: கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலை! ரூ .45000 சம்பளம்

image

தஞ்சை: Engineering படித்தவர்களுக்கு தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) தமிழ்நாட்டில் Supervisors உள்ளிட்ட 63 பணியிடங்கள் நிரப்படவவுள்ளது. மாத சம்பளமாக Rs.45,000 வழங்கப்படும். கல்வி தகுதி B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். இங்கே <>கிளிக் <<>>செய்து 6.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT NOW

News August 15, 2025

தேசிய கொடியை ஏற்றிய தஞ்சை ஆட்சியர்

image

79வது சுதந்திர தினவிழாவில் தஞ்சை மாவட்டஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தேசியகொடியினை ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்களையும், சமாதான புறாக்களையும் பறக்க விட்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் நின்றவாறு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளின் சார்பில் 32 பயனாளிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

error: Content is protected !!