News February 23, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.22) இரவு 10 முதல் இன்று (பிப்.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 25, 2026
விவசாயிகளுக்கு முக்கிய ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மத்திய-மாநில அரசுகளின் சலுகைகளை பெற விவசாயிகள் தங்களுடைய நில உடமைகளை பதிவு செய்து, அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இதற்கு வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் கொடுத்து பதிவு செய்யலாம்.” என அறிவித்துள்ளார்.
News February 25, 2026
தஞ்சை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News February 25, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தஞ்சை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வயல்வெளிகளில் அறுவடை பணிகளை முடித்த பின்பு அறுவடை எந்திரங்களை சுத்தம் செய்யாமல் சாலைகளில் இயக்கப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்தை தவிர்க்க நெல் அறுவடை எந்திரங்களை அறுவடை பணிகள் முடித்த பின்பு சக்கரங்களில் ஒட்டியுள்ள மண்ணை சுத்தம் செய்த பின்னரே சாலைகளில் இயக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


