News October 17, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று (அக்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News October 17, 2025
தஞ்சை: தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில் தென் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, (அக்.17) நாளை மட்டும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்னை எக்மோரில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, கும்பகோணம் நிலையத்தை காலை 05.28 மணிக்கு வந்தடையும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
News October 17, 2025
தஞ்சை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க !
News October 17, 2025
தஞ்சை: அரசு மதுபான கடையை உடைத்து திருட்டு

பரக்கலக்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் அரசு மதுக்கடை வயல்வெளிக்குள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கடை விற்பணை முடித்து கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில், நேற்று கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு ரூ.15,000 மற்றும் 96 மதுபாட்டில்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.