News October 22, 2025
தஞ்சாவூர்: அவசர கால உதவி எண் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் 18004251100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 22, 2025
தஞ்சையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விவரம்

தஞ்சாவூர், விளார் சைலஜா மணிவிழா அரங்கத்திலும், தாராசுரம் மேல் பாக்கம், மாதவன் சீதையம்மாள் திருமண மண்டபத்திலும், அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவில் திருமண மஹாலில் நாளை (அக்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. மேலும் சுவாமிமலை பாலாம்பாள் திருமண மண்டபத்திலும், கீழ உளூர் அம்மா மண்டபத்திலும், திருப்பனந்தாள் ஸ்ரீ வேலன் திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
தஞ்சை: மாநில தடகள போட்டிகள் ஒத்திவைப்பு

தஞ்சாவூரில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இக்கனமழை காரணமாக தஞ்சாவூரில் 24.10.2025 முதல் 29.10.2025 வரை நடைபெறுவதாக இருந்த மாநில அளவிலான குடியரசுதின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மழை விட்ட பிறகு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரி நியமனம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 12 மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரியாக தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (சென்னை) அதிகாரியான எச்.கிருஷ்ணனுன்னி நியமிக்கப்பட்டு உள்ளார்.